Posts

தமிழா தமிழா நாளை நம் நாளே - ஏ ஆர் ரஹ்மான்

தமிழா தமிழா நாளை நம் நாளே தமிழா தமிழா நாடும் நம் நாடே(2) என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா தமிழா தமிழா நாளை நம் நாளே தமிழா தமிழா நாடும் நம் நாடே இனம் மாறலாம் குணம் உண்டு தான் இடம் மாறலாம் நிலம் ஒன்று தான் மொழி மாறலாம் பொருள் ஒன்று தான் கலி மாறலாம் கொடி ஒன்று தான் திசை மாறலாம் நிலம் ஒன்று தான் இசை மாறலாம் மொழி ஒன்று தான் நம் இந்தியா அதும் ஒன்று தான் தமிழா தமிழா கண்கள் கலங்காதே விடியும் விடியும் உள்ளம் கலங்காதே(2) உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா தமிழா தமிழா நாளை நம்நாளே தமிழா தமிழா நாடும் நம் நாடே நவபாரதம் பொதுவானது இது வியர்வையால் உருவானது

பாடலாசிரியர் : நா. முத்துக்குமார்

பாடலாசிரியர் : நா. முத்துக்குமார்  கொஞ்சிப் பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடி கொஞ்சமாக பார்த்தால் மழச் சாரல் வீசுதடி நான் நின்னா நடந்தா கண்ணு உன் முகமே கேக்குதடி அட தொலைவில இருந்தா தானே பெரும் காதல் கூடுதடி தூரமே தூரமாய் போகும் நேரம் கொஞ்சிப் பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடா கொஞ்சமாக பார்த்தால் மழச் சாரல் வீசுதடா நான் நின்னா நடந்தா கண்ணு உன் முகமே கேக்குதடா அட தொலைவில இருந்தா தானே பெரும் காதல் கூடுதடா தூரமே தூரமாய் போகும் நேரம் ஆச விலையிடுதா நெஞ்சம் அதில் விழுதா எழுந்திடும் போதும் அன்பே மீண்டும் விழுந்திடுதா தனிமை உன்னை சுடுதா நினைவில் அனல் தருதா தலையணைப் பூக்களில் எல்லாம் கூந்தல் மணம் வருதா ? குறு குறு பார்வையால் கொஞ்சம் கடத்துறியே குளிருக்கும் நெருப்புகும் நடுவுல நிறுத்துறியே வேற என்ன வேணும் நேரில் வர வேணும் சத்தம் இல்ல முத்தம் தர வேணும் கொஞ்சிப் பேச வேணாம்… நான் நின்னா… தூரமே… கொஞ்சிப் பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடா கொஞ்சமாக பார்த்தால் மழச் சாரல் வீசுதடா பாடல் : கொஞ்சிப் பேசிட வேணாம் இசை : நிவாஸ் பிரசன்னா   பாடலாசிரியர் : நா. முத்துக்குமார்...

மனோகரி.... மனோகரி...

உருக்கியோ... நட்சத்திரத் தூறல் தூறல் கிறக்கியோ... என் அழகின் சாரல் சாரல் பொறுக்கி மினுக்கி செதுக்கிப் பதித்த மூரல்... மூரல் நெருக்கி இறுக்கி செருக்கை எரிக்கும் ஆரல்.... ஆரல் மனோகரி.... மனோகரி... மனோகரி... மனோகரி.... கள்ளனா௧ உன்னை அள்ள  மெள்ள மெள்ள வந்தேன்! எந்தன் உள்ளம் கொள்ளை போகிறேன்! ஆடை விட்டு மீறி உந்தன் அழகுகள் துள்ள சொக்கி சொக்கி சொக்கி நிற்கிறேன்! ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல்.... தேடல்... நீல வானை ஊற்றி  கண்கள் படைத்தானோ? வேறே... என் தேடல் வேறே! தேயும் திங்கள் தேய்த்து செய்த இடை தானோ?  வேறே... என் தேடல் வேறே! வேழம் அது கொண்டேதான் அவன் என் தோள்கள் செய்தானோ! வாழை அது போலே தான் அவன் என் கால்கள் செய்தானோ! வழுக்கிட வா! மனோகரி.... மனோகரி...  மனோகரி... மனோகரி.... பூவை விட்டு பூவில் தாவி  தேனை உன்னும் வண்டாய் பாகம் விட்டு பாகம் பாகம் தாவினேன்! ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல்.... தேடல்... மேகத் துண்டை வெட்டி கூந்தல் படைத்தானோ? வேறே... என் தேடல் வேறே! காந்தள் பூவைக் கிள்ளி கைவிரல் செய்தானோ?  வேறே... என் தேடல் வேறே! ஆழி கண்ட வெண்சங்கில் அவன் அணல் ஒன்...

பச்சைத் தீ நீயடா! இச்சைப் பூ நானடா!

பச்சைத் தீ நீயடா! இச்சைப் பூ நானடா! ஒற்றைப் பார்வை கொண்டே பற்றிக் கொண்டாயடா! வெற்றுக் கல் நானடா! வெட்டும் உளி நீயடா! அற்பப் பாறை என்னில் சிற்பம் செய்தாயடா நீயே மண் மின்னும் வெண்தாரகை  உள்ளங்கை சேர்ந்தப் பூங்காரிகை கைகள் நாம் கோர்க்கச் சிறகாகுமே! புது வானங்கள் உருவாகுமே! மான் விழிக்குள் எந்தன்  வாழ்வொன்றைக் காண மாமலை ஒன்றேறி வந்தேனடி! இதயம் ஒன்று உள்ளதென்று உன் அணைப்பாலே கண்டேனே! இனும் எனை இறுக்கியே அணைத்திடத் துடித்தேனே! நீயே மண் மின்னும் வெண்தாரகை  தோளில் வீழ்கின்ற பூங்காரிகை உந்தன் தோளோடு தோள் சேர்க்கிறேன் என்னில் தோகைகள் நான் பார்க்கிறேன்! கீறலில் உண்டாகும்  கீதங்கள் கேட்டாய் மோதலின் மோகங்கள் கேட்டாயடி! பிறவி பல எடுத்தாலும் நிகழும் கணம் நான் மறவேனே வலிகளை வரமென தந்திடக் கேட்டேனே! நீயே மண் மின்னும் வெண்தாரகை  கண்ணில் தேன் சிந்தும் பூங்காரிகை உந்தன் நெஞ்சுக்குள் நான் நீந்தினேன் காதல் ஆழத்தை நான் காண்கிறேன்!

இருள்கொண்ட வானில் முளைக்கும் பாகுபலி!

இருள்கொண்ட வானில் இவள் தீப ஒளி! இவள் மடிக் கூட்டில்  முளைக்கும் பாகுபலி! கடையும் இந்தப் பாற்கடலில் நஞ்சார்? அமுதார்? மொழி! வான்விட்டு மகிழ்மதி ஆண்டிடவே வந்தச் சூரியன் பாகுபலி வாகைகள் மகுடங்கள் சூடிடுவான் எங்கள் நாயகன் பாகுபலி கடையும் இந்தப் பாற்கடலில் நஞ்சார்? அமுதார்? மொழி! அம்பென்றும் குறி மாறியதில்லை வாளென்றும் பசி ஆறியதில்லை முடிவென்றும் பின் வாங்கியதில்லை தானே... சேனை... ஆவான் தாயே... இவன் தெய்வம் என்பான் தமையன்... தன் தோழன் என்பான் ஊரே... தன் சொந்தம் என்பான் தானே... தேசம்.... ஆவான்... சாசனம் எது? சிவகாமி சொல் அது! விழி ஒன்றில் இத் தேசம் விழி ஒன்றில் பாசம் கொண்டே… கடையும் இந்தப் பாற்கடலில் நஞ்சார்? அமுதார்? மொழி!

சிவா சிவாய போற்றியே ! நமச்சிவாய போற்றியே!

சிவா சிவாய போற்றியே! நமச்சிவாய போற்றியே! பிறப்பறுக்கும் ஏகனே!  பொறுத்தருள் அநேகனே! பரம்பொருள் உன் நாமத்தை கரங்குவித்துப் பாடினோம்! இறப்பிலி உன் கால்களை சிரங்குவித்து தேடினோம்! யாரு இவன்? யாரு இவன்? கல்லத் தூக்கிப் போறானே! புள்ள போல தோளு மேல உன்னத் தூக்கிப் போறானே! கண்ணு ரெண்டு போதல! கையு காலு ஓடல! கங்கையத்தான் தேடிகிட்டு  தன்னத் தானே சுமந்துகிட்டு லிங்கம் நடந்து போகுதே! எல்லையில்லாத ஆதியே எல்லாமுணர்ந்த சோதியே மலைமகள் உன் பாதியே அலைமகள் உன் கைதியே அருள்வல்லான் எம் அற்புதன் அரும்பொருள் எம் அர்ச்சிதன் உமை விரும்பும் உத்தமன் உருவிலா எம் உருத்திரன் ஒளிர்விடும் எம் தேசனே குளிர்மலை தன் வாசனே எழில்மிகு எம் நேசனே அழித்தொழிக்கும் ஈசனே நில்லாமல் ஆடும் அந்தமே கல்லாகி நிற்கும் உந்தமே கல்லா எங்கட்கு சொந்தமே எல்லா உயிர்க்கும் பந்தமே!

நெருப்புக்குப் பிறந்தான்

ஞாபகம் வருகிறதா? இவன் தீயென்று தெரிகிறதா  தடைகளை வென்றே  சரித்திரம் படைத்தவன்  ஞாபகம் வருகிறதா? நீரின்றி வேறில்லை இவன் யாருக்கும்  அரசனில்லை காடுகள் தாண்டி  கிடக்கின்ற பொழுதும்  காற்றுக்கு காயமில்லை யவன் என்று நினைத்தாய்  எதைக்கண்டு சிரித்தாய்  வெளிப்படும் புது சுயரூபம் நெருப்புக்குப் பிறந்தான் நித்தம் வளர்ந்தான் வெளிப்படும் புது சுயரூபம் விஸ்வ.. ரூபம்…விஸ்வ.. ரூபம்… விஸ்வ.. ரூபம்…விஸ்வ.. ரூபம்… ஞாபகம் வருகிறதா? இவன் தீயென்று தெரிகிறதா  தடைகளை வென்றே  சரித்திரம் படைத்தவன்  ஞாபகம் வருகிறதா? நீரின்றி வேறில்லை இவன் யாருக்கும்  அரசனில்லை காடுகள் தாண்டி கிடக்கின்ற பொழுதும்  காற்றுக்கு காயமில்லை யவன் என்று நினைத்தாய்  எதைக்கண்டு சிரித்தாய்  வெளிப்படும் புது சுயரூபம் நெருப்புக்குப் பிறந்தான் நித்தம் வளர்ந்தான் வெளிப்படும் புது சுயரூபம் விஸ்வ.. ரூபம்…விஸ்வ.. ரூபம்… விஸ்வ.. ரூபம்…விஸ்வ.. ரூபம்…

என்ன சத்தம் இந்த நேரம்

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா கிளிகள் முத்தம் தருதா அதனால் சத்தம் வருதா…அடடா… என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா — கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே கண்களில் ஏன் அந்தக் கண்ணீர் அது யாராலே கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே காதலன் மடியில் பூத்தால் ஒரு பூப்போலே மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டால் ஆரிரரோ பாடு ஆரிரரோ இவர் யார் எவரோ பதில் சொல்வார் யாரோ — என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா கிளிகள் முத்தம் தருதா அதனால் சத்தம் வருதா…அடடா… என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா — கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ மங்கை இவள் வாய்திறந்தால் மல்லிகைப்பூ வாசம் ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும் யார் இவர்கள் இரு பூங்குயில்கள் இளம் காதல் மான்கள் — என்ன சத்தம் இந...

புஷ்பவனம் குப்புசாமி நான் வாழும் பூமிக்கு வணக்கம்

வணக்கம் வணக்கம் வணக்கம் நான் வாழும் பூமிக்கு வணக்கம் இருக்கோ இல்லையோ தெரியாது ஒரு வேளை இருந்தா சாமிக்கும் வணக்கம் குத்த வெச்சு கூத்து பாக்கும் உங்களுக்கு வணக்கம் உச்சியில வந்து பாக்கும் நிலாவுக்கும் வணக்கம் பரம்பரை சொல்லி தந்த பாட்டுக்கும் தான் வணக்கம் நான் பறை கொட்ட தோலு தந்த மாடுக்கும் தான் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் === புத்தம் புது பாட்டு வந்தா தாண்டவகோனே என் ரத்தம் எல்லாம் தீ புடிக்கும் தாண்டவகோனே தப்பெடுத்து அடிக்கையிலே தாண்டவகோனே என் நெத்தியிலே இடி இடிக்கும் தாண்டவகோனே பாட்டு என்னும் சன்னல் வழி தாண்டவகோனே என் பழைய காலம் தெரியுதடா தாண்டவகோனே பாட்டு என்னும் சன்னல் வழி தாண்டவகோனே என் பழைய காலம் தெரியுதடா தாண்டவகோனே ஹேய் புத்தம் புது பாட்டு வந்தா தாண்டவகோனே என் ரத்தம் எல்லாம் தீ புடிக்கும் தாண்டவகோனே தப்பெடுத்து அடிக்கையிலே தாண்டவகோனே என் நெத்தியிலே இடி இடிக்கும் தாண்டவகோனே === ஏயே… மாடு வால புடிச்சி மாட குளம் கடந்து தாமர பூ பறிச்சி தந்தேன் அய்யா என் மசினிக்கு ஹா..மஞ்சி விரட்டுக்குள்ள மயில காள அடக்கி தங்க செயின் எடுத்து தந்தேன் அய்யா என் தங்கத்...