கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா


கண்ணுக்குள் நூறு நிலவா, இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
கண்ணுக்குள் நூறு நிலவா, இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை
ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்தை வருமா
ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்தை வருமா
கண்ணுக்குள் நூறு நிலவா, இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
(சம்பசாம்பவி சந்ரமௌளிதகலா
வர்ண உமா பார்வதி
காளி பைபவத்தீ ஷிவற்றி நயன
காத்யாயனி பைரவி
சாவித்ரி நவயுவன சுபகாரி
சாம்ராஜ்ய லட்ஷ்மிப்ரதா…
)

தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்
கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா
கொல்லை துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா
வானுக்கு எல்லை யார் போட்டது
வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது
சாத்திரம் தாண்டி தப்பி செல்வதேது

கண்ணுக்குள் நூறு நிலவா, இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
(பூவே…பெண் பூவே…
இதில் என்ன அதிசயம், இளமையின் அவசியம்
இது என்ன ரகசியம், இவன் மனம் புரியலயா ? )

ஆணின் தவிப்பு அடங்கி விடும்
பெணின் தவிப்பு தொடர்ந்து விடும்
உள்ளம் என்பது உள்ளவரைக்கும்
இன்ப துன்பம் எல்லாமே இருவருக்கும்
என்னுள்ளே ஏதோ உண்டானது
பெண் உள்ளம் இன்று ரெண்டானது
ரெண்டா ? ஏது ? ஒன்று பட்ட போது..

கண்ணுக்குள் நூறு நிலவா, இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை
ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்தை வருமா
ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்தை வருமா
கண்ணுக்குள் நூறு நிலவா, இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
படம் : வேதம் புதிது
பாடல் : கண்ணுக்குள்
இசை : தேவேந்திரன்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : சித்ரா, எஸ்.பி.பாலசுப்ரமணியம்

Comments

Popular posts from this blog

திருமதி பழனிச்சாமி ! பெண் என்ற ஜாதியிலே ஆயிரத்தில்

குணா - கண்மணி அன்போட காதலன்

செந்தமிழ் நாட்டு திருமகள்