தாலாட்ட ஆளில்லை தாய் வீடு போல் இல்லை






நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணார கண்டான் உன் சேயே
நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே

கீழ்வானிலே ஒளி வந்தது
கூண்டை விட்டு கிளி வந்தது
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
வாடும் பயிர் வாழ
நீ தானே நீர் வார்த்த கார்மேகம்

நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணார கண்டான் உன் சேயே
நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே

மணிமாளிகை மாடங்களும்
மலர் சூடிய மஞ்சங்களும்
தாய் வீடு போல் இல்லை
அங்கு தாலாட்ட ஆளில்லை
தாய் வீடு போல் இல்லை
அங்கு தாலாட்ட ஆளில்லை
கோவில் தொழும் தெய்வம் இங்கு
நீயின்றி நான் காண வேறில்லை

நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணார கண்டான் உன் சேயே
நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே

படம் : தூங்காதே தம்பி தூங்காதே
பாடல் : நானாக
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்

Comments

Popular posts from this blog

திருமதி பழனிச்சாமி ! பெண் என்ற ஜாதியிலே ஆயிரத்தில்

குணா - கண்மணி அன்போட காதலன்

செந்தமிழ் நாட்டு திருமகள்