பலனூறு ராகங்கள் இருந்தாலென்ன


ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும்போது அறிவாயம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும்போது அறிவாயம்மா
பலனூறு ராகங்கள் இருந்தாலென்ன
பதினாறு பாட சுகமானது
பலனூறு ராகங்கள் இருந்தாலென்ன
பதினாறு பாட சுகமானது
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும்போது அறிவாயம்மா
பலனூறு ராகங்கள்

கலைமாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான சுவரம் பாடப் பதமானது
கலைமாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான சுவரம் பாடப் பதமானது
அழகான இளம்பெண்ணின் மேனி தான் கூட
ஆதார சுருதி கொண்ட வீணையம்மா
அழகான இளம்பெண்ணின் மேனி தான் கூட
ஆதார சுருதி கொண்ட வீணையம்மா

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும்போது அறிவாயம்மா

இடையாட வலையாட சலங்கைகள் ஆட
இலையோடு கொடிபோல நடமாடினாள்
இடையாட வலையாட சலங்கைகள் ஆட
இலையோடு கொடிபோல நடமாடினாள்
உலகாளும் உமையாளின் ராகபாவங்கள்
ஆனந்தம் குடிகொண்ட கோலமம்மா
உலகாளும் உமையாளின் ராகபாவங்கள்
ஆனந்தம் குடிகொண்ட கோலமம்மா

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும்போது அறிவாயம்மா
பலனூறு ராகங்கள் இருந்தாலென்ன
பதினாறு பாட சுகமானது
பலனூறு ராகங்கள் இருந்தாலென்ன
பதினாறு பாட சுகமானது
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும்போது அறிவாயம்மா
படம் : தில்லு முல்லு
பாடல் : ராகங்கள் பதினாறு
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்

Comments

Popular posts from this blog

திருமதி பழனிச்சாமி ! பெண் என்ற ஜாதியிலே ஆயிரத்தில்

குணா - கண்மணி அன்போட காதலன்

செந்தமிழ் நாட்டு திருமகள்